தமிழ் இலக்கிய விழாக்களில் அதிகம் கலந்து கொள்ள முடியாத வருத்தம் எனக்குண்டு. காரணம், எனது உற்ற நண்பர்களுக்குத் தெரியும். நான் சார்ந்த துறை அப்படிப் பட்டது! உளஇயல் துறைப் பணியும் காவலர் பணி போன்று நேரம் காலம் பார்க்க இயலாத திடீர் தன்மை கொண்டது! சொன்ன இடத்துக்கு சொன்ன நேரத்துக்கு வர இயலாது. அத்துடன் இருக்கவே இருக்கிறது குடும்பச் சூழல்கள், குழந்தைகளின் கல்வி-அது தொடர்பான போக்கு வரத்து, நேரமின்மை இத்யாதி!
எனினும், 'இலக்கியச்சோலை' இதழ் ஆசிரியரும் என் இனிய நண்பரும் இளவலுமான தமிழினியன் நடத்தும் எந்தவொரு சிறிய பெரிய விழாக்களிலும் கலந்து கொள்ள முயற்சித்துக் கொண்டே இருந்து சில வெற்றிகளையும் அடைவதுண்டு!
அப்படி எனக்கு நானே வெற்றி அடைந்த ஒரு நாளுக்கான விழாப் பயணம் சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு 4.5.2012 அன்று காலை துவங்கியது! பாண்டியிலே காலை முதல் மதியம் வரை ஒரு இலக்கிய நிகழ்வு. அதாவது, பாண்டியில் இலக்கிய சோலை அறிமுக விழா மற்றும் சென்னை/புதுவை கவிஞர்கள்/எழுத்தாளர்கள் சங்கம விழா ......இல் சிறப்பாக நடை பெற்றது! சென்னையில் இருந்து ஒரு சிறியதொரு பேருந்து மூலம் சுமார் பதினைந்து பேர் புறப்பட்டோம். ஏற்பாடு சோலை தமிழ் இனியன்.
திரு. பெரியார் பெரும் தொண்டர் பாண்டி மு. வேலு
திரு. கவிஞர் ஜலாலுதீன் (புகைப்படங்கள் அவர் கைவண்ணமே)
திரு. சந்தக் கவிஞர் கதிரவன்
திரு.
(நண்பர் இனியன் என்னிடம் விழாவில் கலந்து கொண்டவர்கள் பெயர் விவரங்கள் அனுப்பினால் இதில் மீண்டும் சேர்க்கலாம் என்று இருக்கிறேன்...முகங்கள் தெரியும் எனக்கு பெயர் தெரியாது! வேறு சில புகைப்படங்கள் சேர்க்க வேண்டும் என்றாலும் சேர்க்க முடியும்!)