Monday, September 27, 2010

பெரியார் என்பது பெயரல்ல; தமிழர் எழுச்சியின் அடையாளம்!


பெரியார் என்பது பெயரல்ல; தமிழர் எழுச்சியின் அடையாளம்!
அறிவார் கொள்கை குணக்குன்று; ஆயுதம் தாங்கிய போராளி!

ஏற்றத் தாழ்வுகள் ஒழிப்பதற்கு அறிவியல் கூடம் அவர்கண்டார் !
போற்று மடமைகள்  தூரவிலக்கி தனியாய்நின்று தவம் செய்தார் !

'நேத்தி நேத்தி' எனச்சொல்லி மூலம்நாடும் முனிவனைப் போல்
சூத்திரம் ஒன்றைக் கண்டடைந்த அறிவியல் அறிஞர்  எம்பெரியார்!

"பேதமிருப்பது சாதியி னால் ஜாதி இருப்பது  மதக்குழியில்
மதத்தை ஒழிக்க-ஜாதிஒழி; ஜாதி ஒழிக்க-கடவுளொழி"!

இதுவே பெரியார் சூத்திரமாம்  மூலம் நறுக்கும் மூதுரையாம்
பொதுவாய் பேதம் 'வர்க்கத்தால்' இங்கோ பேதம் 'பிறவி'யினால்!

சூத்திரன் படிக்கக் கூடாதாம் சாத்திரம் சொல்ல வெகுண்டார்பார்!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அடிமைப் பட்ட வரலாற்றை

மாற்றியமைக்கப் புறப்பட்ட "ஒற்றை ராணுவம்" எம்பெரியார்!
அறிஞரண்ணா  நெகிழ்ந்தே சொல்வார் "என்னதுவாழ்வில் கண்டதும் கொண்டதும்

ஒரேஏ தலைவர் அவர்தாம் பெரியார்; உயர்எண்ணங்கள் மலர்கிற சோலை!
யுகப்பணிதன்னை வாழ்நாள் முடித்தோன்; நூற்றாண்டுகளை குளிகையில் அடைத்தோன்,"

அரியணை மறுத்த பரதன்-அண்ணா தலைவர் பதவி பெரியார்க்கென்றான்
தளபதியாகி ஆட்சியில் அமர்ந்து பெரியார்க்  கனவுகள் சட்டமாக்கினான்!

முத்தமிழ் அறிஞன் மூன்று மந்திரம் தந்தவன் சொல்வான்
"முதல்வர் பதவி ஏற்றநாள்விட தந்தை தடம்பற்றி நடந்தநாட்களே

எந்தன்வாழ்வின் வசந்த நாளென"; எத்துனை அரிய சீடன்அண்ணா?
பெரியார்-அண்ணா தந்தை-தனயன் அதுபோல் பிணைப்பு இனியும்வருமா?

தமிழர் சமூகம் இன்னும்நிமிர காலம் பெரியார் இனிதருமா?
சாதிக் கொடுமைகள் சாடியவீரன்; பெண்கள் சமத்துவம் பேசியதீரன் !

சிறைக்களம்ஆயிரம் செருக்கோடு சென்றவன்; நாடொறும் கூட்டம் தினமொருபயணம்!
அகவை தொன்னூற்றைந்திலும் இளைஞன்; தமிழர்நிமிரவே பேசுவான் எழுதுவான்!

தன்னலம் இலாத ஈடிலாத்தலைவன்; 'உண்மையே'பேசும் தமிழ்க்குல மறவன்!
உலகப்பந்தின் கருவறையில் ஆ!  இவன்போல் ஒருவன் இனிபிறவான்!

Copy Protected by Computer tech tips

No comments:

Post a Comment