Thursday, October 7, 2010

குறையொன்றும் இல்லை.......மறைமூர்த்தி கண்ணா ! பாடல் வரிகள்:



எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள்


இந்தப் பாடல் பாடாத வீடுகளே இல்லை எனலாம். இருப்பினும் பாடல் 
வரிகள் முழுமையாகத் தெரியாதவர்கள் அநேகம் பேர் உள்ளனர். 
அவர்களுக்காக இந்தப் பக்கம் ஒதுக்கப் பட்டுள்ளது:
 ________________________________________

குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கண்ணா...
குறையொன்றும் இல்லை கோ..விந்தா!


கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா,,
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றும் இல்லை... மறை மூர்த்தி கண்ணா!


வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா!
மணிவண்ணா...மலையப்பா..கோவிந்தா...கோவிந்தா..
கோவிந்தா...கோவிந்தா..


திரையின் பின்நிற்கின்றாய் கண்ணா...
கண்ணா....திரையின் பின்நிற்கின்றாய் கண்ணா
உன்னை...மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா !


குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா (2)
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)
மணிவண்ணா... மலையப்பா.. கோவிந்தா.. கோவிந்தா
கோவிந்தா.. கோவிந்தா 


கலிநாளுக் கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக் கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா !


யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா  உன்மார்பில்
ஏதும் தரநிற்கும் கருணைக் கடல்அன்னை
என்றும் இருந்திட ஏதுகுறை எனக்கு (2)


ஒன்றும் குறைவில்லை மறைமூர்த்தி கண்ணா (2)
மணிவண்ணா... மலையப்பா.. கோவிந்தா.. கோவிந்தா...
கோவிந்தா..கோவிந்தா. .(2)
____________________________________________________________


-மூதறிஞர் இராஜாஜி எழுதி மதுரை சண்முகவடிவுசுப்புலட்சுமி
என்னும் எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள் அன்றும் இன்றும் என்றும் பாடிக் கொண்டிருக்கும் இனிமையான பாடல் வரிகள் இவை !

மீரா திரைப்படத்தில் பக்தியில் தோய்ந்த அவரின் கண்களையும் நாம் மறக்க முடியுமா என்ன?
'மீரா' திரைப்படத்தில்

No comments:

Post a Comment